இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு அமைச்சகம், பனாஜியில் உள்ள 2 சிக்னல் பயிற்சி மையம் மூலமாக 190 CSBO (Civilian Switch Board Operator) கிரேடு-II பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பொதுப் பிரிவினருக்கு 94 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 43 இடங்களும் எனப் பல்வேறு பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் குறைந்தது 6 மாத கால PBX தொலைபேசி இயக்க அனுபவம் உள்ள தகுதியான இந்தியக் குடிமக்கள் வரும் மே 31, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனை முறையாக நிரப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்று ஆகியவற்றை PDF வடிவில் இணைத்து sunshine.rise@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மின்னஞ்சலின் ‘Subject’ பகுதியில் “CSBO விண்ணப்பம் – உங்கள் பெயர்” என்று குறிப்பிடுவது கட்டாயமாகும். ஆன்லைன் வாயிலாக (மின்னஞ்சல்) மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தேர்வு முறையானது 100 மதிப்பெண்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நடைமுறைத் தேர்வு (Practical Test) என இரு கட்டங்களாக நடைபெறும். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் நுண்ணறிவுத் திறன் சார்ந்த கேள்விகள் இடம் பெறும். இதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். அரசுப் பணியில் சேர விரும்புவோர் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க முன்னதாகவே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
