“டிரைவர் மகன் டூ அரசு கொறடா” விருகம்பாக்கம் சபரிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கி முதல்வர் விஜய் அதிரடி..!!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான சபரிநாதன், தனது 21 வயதிலேயே விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார். தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து, தற்போது அரசின் முக்கியப் பொறுப்பு வரை அவர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர், 76,092 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். ஒரு சாதாரணத் தொண்டனாகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியின் கொறடாவாக சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ள செய்தி, தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது உழைப்பிற்குத் தரும் அங்கீகாரம் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.