மாட்டை விற்று மனைவியை படிக்க வைத்த கணவர்… அரசு வேலை கிடைத்ததும் ‘கழட்டிவிட்ட’ மனைவி… நடுரோட்டில் தவிக்கும் கூலித் தொழிலாளி..!!

By Soundarya on வைகாசி 12, 2026

Spread the love

லூதியானாவில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரியும் ராஜேஷ் வர்மா, தனது மனைவி ரேணுவை நர்ஸிங் (ANM) படிக்க வைக்க இரவு பகலாக உழைத்தார். தனது வாழ்வாதாரமாக இருந்த இரண்டு எருமைகளை விற்றும், கரும்புப் பயிர்களை விற்றும், கடன் வாங்கியும் மனைவியின் கனவிற்காக ராஜேஷ் பணத்தைச் சேர்த்தார். கணவனின் தியாகத்தால் ரேணு படிப்பை முடித்து ஒரு அரசு வேலையையும் பெற்றார்.

இருப்பினும், அரசு வேலை கிடைத்தவுடன் கதையில் ஒரு அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டது. வேலை கிடைத்த கையோடு ரேணு தனது கணவருடன் வாழ மறுத்து அவரைப் பிரிந்து சென்றார். அத்துடன் நிற்காமல், கணவர் தரப்பிலிருந்து 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரதட்சணை கேட்பதாகக் கூறி, ராஜேஷ் மீது அவர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

   

தற்போது ராஜேஷ் தனது பார்வையற்ற மற்றும் நோய்வாய்ப்பட்ட தாயுடன் நீதிக்காகக் காவல் நிலையங்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். மனைவியை முன்னேற்றத் தான் செய்த தியாகங்கள் அனைத்தும் வீணாகிப் போனதுடன், இப்போது பொய்யான வழக்குகளையும் சந்திப்பதாக ராஜேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.