நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவே வாக்களிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ. ஓ.எஸ். மணியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மையான ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதலமைச்சர் விஜய், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். மேலும், அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்து கையெழுத்திட்டுள்ள நிலையில், சி.வி. சண்முகம் அமைச்சர் பதவியைப் பெறுவதற்காகத் திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பி வருவதாக ஓ.எஸ். மணியன் கடுமையாகச் சாடினார்.
