பெரும் அதிர்ச்சி..! முதலமைச்சர் விஜய்க்காக தீக்குளித்த தவெக நிர்வாகி பலி..!!

By Swetha on வைகாசி 12, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தொண்டர் அணி இணை அமைப்பாளராகப் பணியாற்றி வந்த இசக்கியப்பன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் தாமதம் ஏற்படுவதால் மனமுடைந்த அவர், கடந்த மே 9-ம் தேதி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்தார். மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும், உடல்நிலை மோசமடைந்ததால் இன்று அவரது உயிர் பிரிந்தது. தவெக நிர்வாகியின் இந்த விபரீத முடிவு கட்சியின் தொண்டர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.