அண்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் ஆடம்பரமான வீடு மற்றும் வசதிகளைக் கண்டு ஈர்க்கப்பட்ட 26 வயது இளம்பெண், தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அவருடன் லிவ்-இன் உறவில் வாழத் தொடங்கினார். குடும்பத்தினர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதைக் கேட்காத அந்தப் பெண், திருமணத்திற்கு முன்பே அந்த நபர் மூலம் மூன்று குழந்தைகளுக்குத் தாயானார்.
காலப்போக்கில், தான் நேசித்த நபர் ஒரு பயங்கரமான குற்றவாளி என்ற உண்மையை அந்தப் பெண் கண்டறிந்தார். அவரது கிரிமினல் பின்னணி வெளிச்சத்திற்கு வந்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், அப்பெண்ணைக் கொலை செய்து உடலை ஒரு கிணற்றில் வீசியுள்ளார். காதலின் பெயரால் ஏமாற்றப்பட்ட அந்தப் பெண்ணின் வாழ்க்கை, தவறான முடிவுகளால் இறுதியில் பெரும் துயரத்தில் முடிந்தது.
