சம்பவம் ஆரம்பம்…. தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா… CM விஜய்யின் அதிரடி உத்தரவு…!

By Nanthini on வைகாசி 12, 2026

Spread the love

தமிழகம் முழுவதும் சுமார் 200 முதல் 500 வரையிலான டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கு முதலமைச்சர் விஜய் அதிரடியாக உத்தரவிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கோயில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள கடைகளை முன்னுரிமை அடிப்படையில் மூடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

முதலமைச்சரின் இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, விதிமீறலாக உள்ள கடைகளைக் கண்டறியும் பணிகளில் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மதுவிலக்கு நோக்கிய இந்த நகர்வு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.