“இன்றே பதவியேற்க வேண்டும்”.. தவெக MLA-களுக்கு CM விஜய் அதிரடி உத்தரவு..!!

By Soundarya on வைகாசி 11, 2026

Spread the love

தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே 11) தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) வரிசையாகப் பதவியேற்று வருகின்றனர். இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் தங்களது வெற்றிச் சான்றிதழை எடுத்து வர மறந்ததாகத் தெரிகிறது. இதனால், “வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத தவெக எம்எல்ஏக்கள், உடனடியாக அவற்றை வரவழைத்து இன்றே பதவியேற்புப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்” என்று அக்கட்சியின் தலைமை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முன்னதாக, தவெக தரப்பில் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள கீர்த்தனா, தனது வெற்றிச் சான்றிதழை எடுத்து வராத காரணத்தால் பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகே அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்தச் சூழலைத் தவிர்க்கவும், மற்ற உறுப்பினர்கள் எவ்விதத் தொய்வுமின்றி பதவியேற்பதை உறுதி செய்யவும் கட்சித் தலைமை தற்போது இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. தற்போது சட்டப்பேரவையில் மற்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வுகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.