BREAKING: திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி… சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!

By Nanthini on வைகாசி 11, 2026

Spread the love

திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில், தபால் வாக்குகள் கையாளுதலில் குளறுபடி நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஒரு தபால் வாக்கை வேறு தொகுதிக்கு அனுப்பியதாகக் கூறுவது முற்றிலும் கற்பனையானது எனத் தெரிவித்த ஆணையம், தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், இது போன்ற புகார்கள் குறித்து தேர்தல் வழக்காக (Election Petition) மட்டுமே முறையிட முடியும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இது தேர்தல் முடிவுகளில் சட்டரீதியான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புதான் தீர்மானிக்கும்.