முந்தைய திமுக அரசு மே மாதம் வரையிலான தொகையை ஏற்கனவே வங்கிக் கணக்குகளில் செலுத்திவிட்ட நிலையில், அடுத்த மாதத்திற்கான தொகை எப்போது மற்றும் எவ்வளவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தத் திட்டத்தில் மாற்றங்கள் இருக்குமா என்பது குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன.
இன்று விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பிறகு அடுத்த மாதமே இந்த உரிமைத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த உயர்வு நடைமுறைக்கு வராவிட்டால், வழக்கம்போல ₹1,000 தொகையே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
