அதிமுகவில் அடுத்த பூகம்பம்… EPS-க்கு எதிராகத் திரும்பிய 37 எம்.எல்.ஏ-க்கள்.. கசிந்த ரகசியத் தகவலால் பரபரப்பு…!

By Nanthini on வைகாசி 10, 2026

Spread the love

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) எதிராகப் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய 47 எம்.எல்.ஏ-க்களில் சுமார் 37 பேர், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியை நியமிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து இபிஎஸ் விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்த நிலையில், மூத்த தலைவர் கே.பி. முனுசாமி இதற்கு குறுக்கிட்டு, இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான தளம் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அல்ல என்றும், கட்சியின் உயர்மட்டக் குழு கூடி ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறி சூழலைத் தற்காலிகமாகத் தணித்துள்ளார். இருப்பினும், தலைமை மாற்றத்திற்கான இந்த உட்கட்சி மோதல் அதிமுகவின் உட்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள அதிர்வுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.