நடிகர் விஜய் அவர்கள் 4-வது முறையாக ஆளுநரைச் சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கான தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் தனது கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோரிய கடிதத்தை வழங்கியதாகவும், அதனை ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் ஏற்றுக்கொண்டதாகவும் இதன் தொடர்ச்சியாக, நாளை (மே 10) விஜய் தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
