ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா..? நாளைக்கு ஒரு நாள் மட்டும் தான் டைம்.. மிஸ் பண்ணிடாதீங்க..! அரசின் அதிரடி அறிவிப்பு…!

By Swetha on வைகாசி 8, 2026

Spread the love

சென்னையில் உள்ள அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) வைத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டுகளில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யவும், தகுதியுள்ளவர்களுக்குச் சரியான முறையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் நாளை (சனிக்கிழமை) சிறப்பு ரேஷன் முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்கள் மூலம் பொதுமக்கள் தங்கள் கார்டுகளில் உள்ள முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல் போன்ற திருத்தங்களை எளிதாகச் செய்துகொள்ளலாம்.

குறிப்பாக, நீண்ட நாட்களாக ரேஷன் பொருட்கள் வாங்காத அட்டைகள் மற்றும் ஆவணச் சரிபார்ப்பு நிலுவையில் உள்ள அட்டைகள் குறித்து இந்த முகாம்களில் விரிவான ஆய்வு நடத்தப்பட உள்ளது. தகுதியற்ற நபர்கள் யாராவது முன்னுரிமைப் பட்டியலில் இருந்தால் அவர்களை நீக்கிவிட்டு, உண்மையில் வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள ஏழை மக்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, உங்கள் ரேஷன் கார்டில் ஏதேனும் சந்தேகம் அல்லது மாற்றங்கள் இருந்தால் நாளை நடைபெறும் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

   

இந்தச் சிறப்பு முகாம்கள் சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்கள் அல்லது குறிப்பிட்ட பொது இடங்களில் காலை முதல் மாலை வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டு, குடும்ப புகைப்படம் மற்றும் பழைய ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை எடுத்துச் சென்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் ரேஷன் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.