வழக்கமாக இந்தியத் திருமணங்கள் பல மாதங்கள் திட்டமிடப்பட்டு, பெரும் பொருட்செலவில் நடத்தப்படும். ஆனால், சண்டிகரைச் சேர்ந்த மணமகன் மற்றும் மணமகள் (ஆகாங்க்ஷா வர்மா) மிகவும் தற்செயலாக இந்த முடிவை எடுத்துள்ளனர். மணமகள் திடீரென உடனடியாகத் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற யோசனையை முன்வைக்க, மணமகன் மற்றும் இரு வீட்டாரும் அதற்கு அடுத்த நிமிடமே சம்மதம் தெரிவித்துள்ளனர். எவ்வித முன் தயாரிப்பும் இன்றி, ஒரு பொறி தட்டியது போல உருவான இந்த எண்ணம் அடுத்த சில மணி நேரங்களிலேயே நிஜமாகத் தொடங்கியது.
வெறும் 24 மணி நேர அவகாசத்தில் சுமார் 30 நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. மிகக் குறைந்த நேரமே இருந்தபோதிலும், அழகான அலங்காரங்கள் மற்றும் நேர்த்தியான ஆடைகளுடன் இந்தத் திருமண விழா மிகவும் உணர்வுப்பூர்வமாக நடந்து முடிந்தது. ஆடம்பரமான கொண்டாட்டங்களை விட, மணமக்களின் விருப்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தத் திருமணம் அமைந்திருந்தது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
View this post on Instagram
இந்தத் திருமணத்தின் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. “திருமணம் என்பது இவ்வளவு எளிமையானதாகவும் அழுத்தமில்லாததாகவும் இருக்க முடியுமா?” என்று பலரும் வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் இவ்வளவு சீக்கிரம் எப்படி ஏற்பாடுகளைச் செய்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினாலும், பெரும்பாலானோர் தேவையற்ற சடங்குகள் மற்றும் வீண் செலவுகளைத் தவிர்க்கும் இத்தகைய ‘இன்ஸ்டன்ட்’ திருமணங்கள் இன்றைய காலத்திற்குத் தேவை என்று பாராட்டி வருகின்றனர்.
