தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக ஆளுநரை சந்தித்தபோது விஜய்க்கு ஆளுநர் ஒரு முக்கியமான உத்தரவாதத்தை அளித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பின் போது, “பெரும்பான்மைக்கான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தைக் கொண்டு வாருங்கள்; அதுவரை வேறு யாரையும் ஆட்சி அமைக்க அழைக்க மாட்டேன்” என ஆளுநர் விஜய்க்குத் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது விஜய் தரப்பினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
அதே நேரத்தில், தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. விஜய்யைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் அரங்கேறும் இந்த அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள், தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
