பரபரப்பில் தமிழகம்..! 24 மணி நேரத்திற்குள் தவெகவுக்கு ஆதரவு..? CPM கட்சி அதிரடி அறிவிப்பு..!!

By Soundarya on வைகாசி 7, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பது குறித்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தவெக ஒரு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும், பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் ஏன் இன்னும் அழைக்கவில்லை என்பது பல சந்தேகங்களை எழுப்புவதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போது நிலவும் இந்த அரசியல் சூழல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசித்து, உரிய முடிவை அறிவிப்போம் என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்து தேர்தலைச் சந்தித்த நிலையில், தற்போது மாறி வரும் அரசியல் சூழலில் சிபிஎம் எடுக்கப்போகும் இந்த முடிவு தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.