தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் பொறுப்பு அர்லேகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இடையிலான சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பில் 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதம் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் கறாராகக் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மையை எவ்வாறு நிரூபிப்பீர்கள் என்ற ஆளுநரின் கேள்விக்கு விஜய் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததால், தற்போதைக்கு அவரை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநர் திட்டமிடவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த இழுபறி நிலையால் தமிழக அரசியலில் ஒருவித முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. முழுமையான பெரும்பான்மைக்கு இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதில் ஆளுநர் உறுதியாக இருப்பதால், கூடுதல் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தவெக தீவிரம் காட்டி வருகிறது. 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை உறுதி செய்யும் கடிதத்தை சமர்ப்பித்தால் மட்டுமே அடுத்தகட்டமாக ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய இந்த அதிரடி மாற்றங்களை ஒன்இந்தியா தமிழ் உடனுக்குடன் வழங்கி வருகிறது.
