35 வயதான ஒரு நபர், தனது 11 ஆண்டுகால கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து, வாழ்க்கைத் தேர்வுகளை மறுபரிசீலனை செய்துள்ளார். பல ஆண்டுகள் ஓயாமல் உழைத்த பிறகு, கார்ப்பரேட் உலகம் வழங்கும் ஆடம்பரங்களும் பதவிகளும் உண்மையான மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதை உணர்ந்து அவர் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.
வங்கி இருப்பு என்பது வாழ்க்கையில் வசதிகளையும் சௌகரியங்களையும் மட்டுமே தரவல்லது, ஆனால் அது ஒருபோதும் மன அமைதியையோ அல்லது வாழ்க்கையின் அர்த்தத்தையோ தந்துவிடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஓடிக்கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில், எதற்காக ஓடுகிறோம் என்ற தெளிவு இல்லாமல் போவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
View this post on Instagram
தனது சேமிப்பு தனக்குத் தேவையான பாதுகாப்பைத் தரும் என்ற நம்பிக்கையில், இனிவரும் காலங்களில் தனக்குப் பிடித்தமான மற்றும் அர்த்தமுள்ள விஷயங்களில் நேரத்தைச் செலவிட அவர் திட்டமிட்டுள்ளார். பணத்தை விட நேரமும், மனநிறைவுமே ஒரு மனிதனின் உண்மையான சொத்து என்பதை இவரது கதை நமக்கு உணர்த்துகிறது
