“ஜோசப் விஜய் எனும் நான்..!” மேடையிலேயே மாஸ் காட்டப்போகும் தளபதி… ராகுல் காந்திக்கு பறந்த அழைப்பிதழ்… ஆடிப்போன அறிவாலயம்…!!!!

By Muthu Mani on வைகாசி 6, 2026

Spread the love

தமிழக அரசியலில் கடந்த இரண்டு தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக-காங்கிரஸ் கூட்டணியில், தற்போது விஜய் தலைமையிலான தவெக-வின் வெற்றியால் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்ட காங்கிரஸின் கோரிக்கையை திமுக நிராகரித்த நிலையில், தற்போது பெரும்பான்மைக்குத் தடுமாறும் விஜய்க்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முன்வந்துள்ளது. இதனை “முதுகில் குத்திய துரோகம்” என திமுகவினர் கடுமையாகச் சாடி வரும் நிலையில், பல ஆண்டுகளாகத் தொடர்ந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தற்போது சிதையும் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளது.

நாளை காலை 11.30 மணிக்கு விஜய் முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில், இவ்விழாவிற்கு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் வருகையை காங்கிரஸ் தரப்பு உறுதி செய்துள்ள நிலையில், இது திமுகவை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. ஏற்கனவே தேர்தல் பரப்புரையின் போது ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்காமல் சென்றது, இந்த விரிசலை அவர் முன்னரே திட்டமிட்டுத் தான் செய்தாரா என்ற சந்தேகத்தையும் அரசியல் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது.

   

ராகுல் காந்தி இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டால், அது இந்தியா (INDIA) கூட்டணியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் நிலைப்பாடுகளுக்கு திமுக ஆதரவு அளிக்க மறுக்கலாம் அல்லது கூட்டணியில் இருந்தே வெளியேறவும் வாய்ப்புள்ளது. தவெக-வின் வருகை தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் மட்டுமல்லாமல், தேசிய அளவில் நீண்டகாலமாகப் பயணித்து வந்த இரு பெரும் கட்சிகளின் உறவிலும் ஒரு நிரந்தரப் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது தெரிகிறது.