தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு இளைஞர் தனது பெற்றோருக்குப் புதிய ஸ்கூட்டர் ஒன்று வாங்கிக் கொடுக்கப் போவதாகக் கூறி அவர்களை வீட்டின் வாசலுக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அங்கு அவர் நிறுத்தி வைத்திருந்தது பல லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த சொகுசு காரான பிஎம்டபிள்யூ (BMW). சாதாரண ஸ்கூட்டரை எதிர்பார்த்து வந்த பெற்றோர், தங்களுக்கு முன்னால் ஜொலிக்கும் சொகுசு காரைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்துப் போயினர்.
தன் மகன் தனக்காக இவ்வளவு பெரிய பரிசை வாங்கியதைக் கண்டு அந்தத் தாய் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். காரைப் பார்த்ததும் அந்தத் தாய் தன் மகனை ஆரத்தழுவி முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விதம் காண்போரை நெகிழச் செய்துள்ளது. தந்தை மகனின் தோளைத் தட்டி தனது பெருமையை வெளிப்படுத்தினார். இந்த அழகான தருணங்களை அந்த இளைஞர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகிறது.
View this post on Instagram
இந்த வீடியோவை பார்த்த ஆயிரக்கணக்கான இணையவாசிகள், அந்த இளைஞரின் செயலைப் பாராட்டி வருகின்றனர். “பெற்றோரின் தியாகத்திற்கு ஈடாக பிள்ளைகள் செய்யும் இது போன்ற செயல்களே அவர்களுக்குப் பெரிய கௌரவம்” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் வழங்கும் விலை உயர்ந்த பரிசுகளை விட, அந்தப் பரிசின் பின்னால் இருக்கும் அன்பும் அக்கறையும் எவ்வளவு பெரிய மகிழ்ச்சியைத் தரும் என்பதற்கு இந்த வைரல் வீடியோ ஒரு சிறந்த உதாரணமாகும்
