“வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன்”… 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: தவெக நிர்வாகி செய்த அந்த காரியம்… அலறும் சென்னை…!

By Nanthini on வைகாசி 6, 2026

Spread the love

சென்னை ஆர்.கே. நகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி தினேஷ் என்பவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தேர்தல் களம் ஓய்ந்து, முடிவுகள் வெளியாகி மக்கள் சற்று இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே. நகர் 43-வது வார்டு வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் தினேஷ், சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கு வந்த தினேஷ் அச்சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என அச்சிறுமியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பயந்துபோயிருந்த சிறுமி, பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தைரியமாகத் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்தனர்.

   

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சிறுமியிடம் தினேஷ் அத்துமீறியது ஆதாரங்களுடன் உறுதியானது. எனினும், கடந்த திங்கள்கிழமை தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், தினேஷ் அந்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இதனால் அவரை உடனடியாகக் கைது செய்வதில் சிக்கல் நீடித்தது. வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு, தலைமறைவாக இருந்த அவரைத் தேடி வந்த போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

   

தமிழக வெற்றிக் கழகம் அரசியல் ரீதியாகப் பல முன்னெடுப்புகளை எடுத்து வரும் சூழலில், அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகி ஒருவர் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கெதிரான இத்தகைய வன்கொடுமைகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.