தமிழக அரசியல் வரலாற்றில் ஒரே தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டாவது முதல்வர் வேட்பாளர் என்ற பெருமையை விஜய் பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் பெரம்பலூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் களம் கண்ட அவர், இரண்டிலும் அபார வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். அந்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு, தற்போது விஜய் அதே போன்றதொரு வெற்றியைப் பதிவு செய்து ஜெயலலிதாவின் சாதனையை மீண்டும் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
