தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது. திமுகவின் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ ரூ.2,000 மற்றும் அதிமுகவின் ‘குலவிளக்கு’ ரூ.2,000 போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைப் புறக்கணித்துள்ள மக்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்குப் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். வெறும் திட்டங்களை மட்டும் பார்க்காமல், ஆட்சி மாற்றத்தை விரும்பி விஜய்யின் முகத்திற்காகவே மக்கள் வாக்களித்துள்ளது தற்போதைய முன்னிலை நிலவரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 104 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. ஆளுங்கட்சியான திமுக 68 தொகுதிகளிலும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 62 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. திராவிடக் கட்சிகள் இடையேயான நேரடிப் போட்டியைத் தகர்த்து, தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வருவது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக திமுக மீதான அதிருப்தி, விஜய்யின் “மாற்றம்” என்ற முழக்கத்திற்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
