“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

By Devi Ramu on வைகாசி 3, 2026

Spread the love

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அமன்குமாரின் மனைவியும் ஒரு நீதிபதி ஆவார். தற்கொலைக்கு முன்னதாக தனது தந்தையைத் தொடர்புகொண்ட அமன்குமார், தான் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், வாழ்வதற்கே கஷ்டமாக இருப்பதாகவும் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் பதற்றமடைந்த அவரது தந்தை ராஜஸ்தானில் இருந்து உடனடியாக டெல்லிக்கு விரைந்து வந்த நிலையிலேயே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

நீதிபதி அமன்குமாரின் தந்தை அளித்த புகாரின்படி, கணவன் – மனைவி இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது. அவரது மனைவி நிதி மாலிக், வீட்டைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அமன்குமாரை மனரீதியாகக் கடுமையாகச் சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அமன்குமார் அழுதுகொண்டே பாத்ரூம் சென்ற நிலையில், நீண்ட நேரம் வெளியே வராததால் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.