“மெட்ரோவுக்கே ஆப்பு!… மாதவரத்தில் மெட்ரோ பொருட்களைத் திருடிய பலே திருடர்கள்!.. புளியந்தோப்பு வாலிபர்களுக்கு போலீஸ் கொடுத்த ‘ட்ரீட்’…!!!

By Muthu Mani on வைகாசி 3, 2026

Spread the love

சென்னையில் மாதவரம் 200 அடி சாலையில், மாதவரம் ரவுண்டானா முதல் கொளத்தூர் சந்திப்பு வரையிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. வரும் 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் இந்தப் பாதையில் ரயில் சேவையைத் தொடங்க இலக்கு நிர்ணயித்து கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள கட்டுமானப் பொருட்களைக் குறிவைத்துத் திருடும் சம்பவங்கள் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கட்டுமானப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றதாகப் புகார் எழுந்தது. இது குறித்து போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கடந்த 25-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கம்பிகளைத் திருடிச் சென்றது உறுதியானது. இதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய போலீஸார், புளியந்தோப்பைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் கௌதம் ஆகிய இரு இளைஞர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்த திருடப்பட்ட கம்பிகளைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் மெட்ரோ கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.