தற்கொலையா..? சதியா..? சிறையில் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம்… 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

By Soundarya on வைகாசி 1, 2026

Spread the love

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 ஜூலை மாதம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது சிறை அறையில் ஒரு குறிப்பை எழுதி வைத்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது. அந்தத் தற்கொலை குறிப்பில், சிறை அதிகாரிகள் மற்றும் அங்குள்ள சூழல் குறித்து அவர் சில கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சிறையில் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும், தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், எப்ஸ்டீன் தனது இறுதி நாட்களில் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், தனது மரணத்திற்குப் பிறகு சொத்துக்கள் யாருக்குச் சேர வேண்டும் என்பது குறித்த சில உயில் தொடர்பான விவரங்களையும் அக்குறிப்பில் சுட்டிக்காட்டியிருந்தார். அவரது மரணம் தற்கொலைதானா அல்லது இதில் ஏதேனும் சதி உள்ளதா எனப் பல்வேறு விவாதங்கள் உலக அளவில் நடந்து வந்த நிலையில், இந்தத் தற்கொலை குறிப்பு குறித்த விரிவான அறிக்கை தற்போது கூடுதல் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.

   

இந்தக் கடிதத்தின் விவரங்கள் பல ஆண்டுகள் கழித்து தற்போது வெளியாகியிருப்பது, இந்த வழக்கின் மீதான ஆர்வத்தை மீண்டும் தூண்டியுள்ளது. குறிப்பாக, அதிகார மட்டத்தில் இருப்பவர்களுடனான அவரது நெருக்கம் மற்றும் அவர் மீதான பாலியல் வழக்குகளின் தீவிரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள மர்மங்களை உடைக்கப் புலனாய்வு அமைப்புகள் இந்தத் தற்கொலை குறிப்பை முக்கிய ஆதாரமாகக் கருதுகின்றன.