தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எக்ஸிட் போல் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் மூன்று முக்கிய வியூகங்கள் (A, B, C) குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. தவெக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விஜய் நேரடியாக முதல்வராகப் பொறுப்பேற்பது முதல் ஆப்ஷனாகவும்; ஒருவேளை அதிமுக மற்றும் தவெக சமமான தொகுதிகளை வென்றால், தவெக தரப்பில் முதலமைச்சர் பதவியையும் அதிமுகவிற்குத் துணை முதல்வர் பதவியையும் விட்டுக்கொடுப்பது இரண்டாவது திட்டமாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, அதிமுக 90 முதல் 100 இடங்களைக் கைப்பற்றி, தவெக குறைந்த இடங்களைப் பெறும் பட்சத்தில், ஆட்சியில் சமபங்கு மற்றும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்துகொள்வது உள்ளிட்ட அதிகாரப் பகிர்வு குறித்த மூன்றாவது வாய்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடித் திட்டங்கள் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
