தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில், தற்போது அமைச்சர்களாக உள்ள ஒரு சிலருக்குப் புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்காது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, வயது முதிர்வு காரணமாகப் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கும், ராணிப்பேட்டையில் பிடிவாதமாகப் போட்டியிட்ட காந்திக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது எனத் தெரிகிறது.
மேலும், தொடர் சர்ச்சைகளில் சிக்கிய ராஜகண்ணப்பன், பணியில் சுணக்கம் காட்டியதாகப் புகாருக்கு உள்ளான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் அமைச்சர் பதவி வழங்க திமுக தலைமை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. நிர்வாகத்திறனை மேம்படுத்தவும், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் திமுக இத்தகைய அதிரடி மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
