இனிமேல் இப்படி பண்ணுவியா…? வாலிபரை மாறி மாறி செருப்பால் அடித்த மாணவிகள்…. பல்கலைக்கழகத்தில் அத்துமீறல்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on சித்திரை 30, 2026

Spread the love

டெல்லி பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவிகளை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்த முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி ஆலோசனைகளை வழங்கி மாணவிகளிடம் தவறான நோக்கத்தில் பழகிய அந்த நபரின் செயல்பாடுகளை அங்கிருந்தவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இளைஞரின் உண்மை முகம் தெரிந்ததும் ஆத்திரமடைந்த மாணவிகள், துணிச்சலுடன் செயல்பட்டு அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

தவறு செய்த அந்த நபருக்கு மாணவிகள் அங்கேயே தர்ம அடி கொடுத்ததுடன், காலணிகளால் அடித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்த வாலிபர் உடனடியாகக் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பல்கலைக்கழகப் பகுதியில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்கள் காட்டிய இந்தத் துணிச்சல் தற்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.