அமெரிக்காவின் வாஷிங்டன் ஹில்ட்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை ஊடகவியலாளர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்றபோது, திடீரென அரங்கேறிய துப்பாக்கிச்சூடு சம்பவம் உலகையே அதிரவைத்துள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கோல் டோமாஸ் ஆலன் (31) என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கண்டறியப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளால் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டதும் சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைத் துரிதமாகச் செயல்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த உயிரைப் பறிக்கும் அச்சுறுத்தல் மற்றும் பதற்றமான சூழலிலும், அங்கிருந்த சில பெண்களின் வினோதமான செயல் கேமராக்களில் சிக்கி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிகாரிகள் அங்கிருந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற முயன்று கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த சில பெண்கள் மேசைகளில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மதுபானப் போத்தல்களை நைசாகத் திருடிச் சேகரிப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர். ஊடகவியலாளர்கள் எனக் கூறப்படும் அந்தப் பெண்கள், ஒருபுறம் மரண பயத்தில் மக்கள் அலறியடித்து ஓடும்போது, எந்தவிதப் பதற்றமும் இன்றி மதுபானப் போத்தல்களை மறைத்து எடுத்துச் சென்றது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
So, there you have press members STEALING wine bottles: this is who the press is!
Repugnant! pic.twitter.com/IlLlmdciXV— TeslaBoomerPapa (@TeslaBoomerPapa) April 26, 2026
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து உயிரைத் தற்காத்துக் கொள்வதை விட, மதுபானப் போத்தல்களைச் சேகரிப்பதிலேயே அந்தப் பெண்கள் குறியாக இருந்த இந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. “மரண பயத்திலும் மதுபானமா?” என்று பலரும் இந்தச் செயலைக் கண்டித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஒரு நாட்டின் தலைவரே குறிவைக்கப்பட்ட இத்தகைய ஆபத்தான தருணத்தில், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நடந்துகொண்டது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
