ஜல்பைகுரி-ராம்நகர் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து சிறுவன் ஒருவன் தனது உடமைகளுடன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளான். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் பயணி ஒருவர் கூச்சலிட, சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்த அபாயச் சங்கிலியை (Emergency Chain) இழுத்துள்ளனர். ஆனால், சங்கிலி இழுக்கப்பட்டும் ரயில் நிற்காமல் தொடர்ந்து சென்றது பயணிகளிடையே பெரும் பீதியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
🚨Train Tragedy: Passengers pull Emergency chain after boy falls off, But Train won't stop.
REALITY : Absolute Negligence Noticed on the jalpaiguri ramnagar route!
A boy fell from a moving train with all the luggage.
When a female passenger screamed, Other Travelers pulled… pic.twitter.com/ayEVuGiEub
— Ramesh Tiwari (@rameshofficial0) April 26, 2026
இந்த இக்கட்டான சூழலில், ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர் (TTE) மற்றும் ரயில்வே உதவி எண்கள் என எதிலிருந்தும் சிறுவனின் சகோதரிக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. ரயில்வே நிர்வாகத்தின் இந்த மெத்தனப் போக்கையும், பாதுகாப்பு அமைப்புகளின் தோல்வியையும் தோலுரிக்கும் வகையில் இந்தச் சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் போராடும் ஒரு சிறுவனின் விஷயத்தில் ரயில்வே காட்டிய இந்த அலட்சியம் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
