மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கடுமையான வெப்பம் நிலவும் வேளையில் ஒரு நாய் அதன் உரிமையாளரால் பால்கனியில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. நிழல் கூட இல்லாத அந்த இடத்தில், தாகத்தாலும் வெப்பத்தாலும் அந்த நாய் தவிப்பதைக் கண்ட அண்டை வீட்டார்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் வசதிக்காக வாயில்லா ஜீவன்களை இவ்வளவு கொடூரமான முறையில் வெயிலில் வாடவிடுவது கண்டிக்கத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றிடம் காட்டும் இத்தகைய அலட்சியம் தண்டனைக்குரியது என்றும், அந்த நாயை உடனடியாக மீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
View this post on Instagram
மனிதநேயமற்ற முறையில் விலங்குகளை வதைக்கும் இதுபோன்ற சம்பவங்கள், செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு இன்னும் தேவை என்பதை உணர்த்துகிறது. வறுமையோ அல்லது நேரமின்மையோ எதுவாக இருந்தாலும், ஒரு உயிருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல் இருப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
