பகீர்..! மாதவிடாய் லீவு கொடுப்பதை தவிர்க்க… 13,000 பெண்களின் கருப்பை அகற்றம்… லாபத்துக்காக கரும்பு வெட்டும் தொழிலாளர்களின் தாய்மையைப் பறிக்கும் கொடூரம்…!!

By Soundarya on சித்திரை 25, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலத்தின் சர்க்கரை ஆலைத் தொழிலில் மறைந்திருக்கும் ஒரு கோரமான உண்மை இது. பெண்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக மனிதநேயமற்ற முறையில் அரங்கேறும் இந்தச் கொடுமை மனதை உலுக்குகிறது. மகாராஷ்டிராவில் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பதைத் தவிர்க்க, அவர்களின் கருப்பையை அகற்றும் (Uteruses Removal) கொடூரமான நடைமுறை நிலவி வருகிறது. கரும்பு வெட்டும் பணியின் போது ஒரு நாள் விடுமுறை எடுத்தால் கூட, அதற்கு அபராதம் விதிக்கப்படுவதால், வறுமையின் பிடியில் இருக்கும் இந்தப் பெண்கள் வேறு வழியின்றி அறுவை சிகிச்சைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 13,000 பெண்கள் இது போன்ற கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும். ஒரு சில மாதங்கள் தொடர்ச்சியாக வேலை வாங்க வேண்டும் என்பதற்காக, இளம் வயதுப் பெண்களின் உடல் நலனைச் சிதைக்கும் இந்தச் செயல் ஒரு நவீன கால அடிமை முறையையே காட்டுகிறது.

   

   

உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட இந்தப் பெண்களின் அடிப்படை உரிமைகள் இங்கே சர்க்கரை ஆலைகளின் லாபத்திற்காகக் காவு கொடுக்கப்படுகின்றன. லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, பெண்களின் தாய்மை மற்றும் ஆரோக்கியத்தைப் பறிக்கும் இந்தச் சர்க்கரைத் தொழில், உண்மையில் அவர்களின் கண்ணீரிலும் ரத்தத்திலும் தான் இனிப்பைத் தேடுகிறது.