சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பெண் ஒருவர் தனது கணவரை கிரிக்கெட் பேட்டால் மிகக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண் தனது கணவரை தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், அவரை உடல் ரீதியாகவும் கடுமையாகத் துன்புறுத்துவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குடும்ப வன்முறை என்பது ஆண்களுக்கும் நிகழக்கூடும் என்கிற விவாதத்தை இணையதளங்களில் மீண்டும் முன்னெடுத்துள்ளது.
After being abused for the past two years bro recorded these clips on his laptop
Think twice before getting married 🙏 pic.twitter.com/1AQLGWjooU
— Vishal (@VishalMalvi_) April 23, 2026
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு ஆயிரம் முறை யோசியுங்கள்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளப் பயனர்கள் பலரும், ஆண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வருவதில்லை என்றும், பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். குடும்பப் உறவுகளுக்குள் நிலவும் இத்தகைய கசப்பான மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தற்போதைய சமூகச் சூழலில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
