“பகீர்!… 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி… பிரயக்ராஜில் நடந்த நெஞ்சை பதர வைக்கும் சம்பவம்”…!!!

By Muthu Mani on சித்திரை 25, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஒரு பழைய மாளிகையில், 60 வயது வீட்டு உரிமையாளர் அங்கு வாடகைக்கு இருந்த குடும்பத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை ஒரு வருடமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பயத்தின் காரணமாக அந்தப் பெண் யாரிடமும் சொல்லாமல் மௌனமாக இருந்துள்ளார். அவர் ஏழு மாத கர்ப்பிணியான நிலையில், அதனை மறைக்க அந்த நபர் கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். அந்த மாத்திரைகளால் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி மற்றும் ரத்தப்போக்கினால், அந்தப் பெண்ணும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் துடிதுடிக்க உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அந்த முதியவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிக்குத் தண்டனை கிடைத்து நீதி நிலைநாட்டப்பட்டாலும், தன் மகளையும் வயிற்றில் இருந்த குழந்தையையும் பறிகொடுத்த தாயின் துயரமும், அந்தப் பெண் அனுபவித்த சித்திரவதைகளும் யாராலும் ஈடுகட்ட முடியாத வடுவாக அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.