வெறும் 3 வாரத்தில் ரூ.19,79,926 கோடி காலி… ஈரானுடன் மல்லுக்கட்டி திவாலாகும் அமெரிக்கா..? அதிரவைக்கும் பென்டகன் அறிக்கை

By Soundarya on சித்திரை 24, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரில், அமெரிக்க ராணுவம் தனது அதிநவீன ஆயுதங்களை மிக அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் பில்லியன் கணக்கிலான டாலர்கள் செலவாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணைகள் முதல் ‘டோமாஹாக்’ (Tomahawk) ஏவுகணைகள் வரை ஆயிரக்கணக்கான ஆயுதங்களை அமெரிக்கா போர்க்களத்தில் இறக்கியுள்ளது. போர் தொடங்கிய முதல் சில நாட்களிலேயே சுமார் $11.3 பில்லியன் (சுமார் ₹94,000 கோடிக்கும் மேல்) மதிப்பிலான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின் போது சுமார் 13,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை அமெரிக்க ராணுவம் தாக்கியுள்ளது. இருப்பினும், ஒரே பெரிய இலக்கை அழிக்கப் போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் பலமுறை குண்டுகளை வீசுவதால், உண்மையான ஆயுதப் பயன்பாடு அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருக்கலாம் என்று நியூயார்க் டைம்ஸ் இதழ் சுட்டிக்காட்டியுள்ளது. ஈரானின் பதிலடித் தாக்குதல்களைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு ஏவுகணைகளுக்கான செலவு மட்டும் சுமார் $5.7 பில்லியனைத் தாண்டியுள்ளது.

   

போர் நீடித்து வருவதால் அமெரிக்காவின் ஆயுதக் கிடங்குகள் வேகமாக காலியாகி வருவது அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நவீன ரக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் இழப்புகள் அதிகரித்து வருவதால், அமெரிக்காவின் ராணுவத் தயார்நிலை (Military Readiness) பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று வாரங்களிலேயே போரின் மொத்த பொருளாதாரத் தாக்கம் $210 பில்லியனை எட்டியுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.