கடந்த 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.வின் மேற்கு மண்டலப் பொறுப்பாளரான வி.செந்தில் பாலாஜி கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் தனது வாக்கினைப் பதிவு செய்யவில்லை என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்த அவர், தான் இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டதாலும், அந்தத் தொகுதி முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவியதாலும், காலை முதல் மாலை வரை அங்கேயே முகாமிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளையும் தீவிரமாக கண்காணித்து வந்ததாகத் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் பணியாற்றியதால், கோவையிலேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார். இதனால் போதிய நேரம் இல்லாத காரணத்தினால், கரூர் தொகுதிக்கு நேரில் சென்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் போனதாக செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தியுள்ளார்.
