தமிழகத்தில் நேற்று நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிக வாக்கு சதவீதத்தைப் பதிவு செய்து நிறைவடைந்தது. இந்த ஜனநாயகத் திருவிழாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். ஆனால், கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் கசிந்த நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில், லோகேஷ் மற்றும் நெல்சன் ஆகிய இருவரும் கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக, அந்தப் படத்தில் அவர்கள் அரசியல் சார்ந்த வசனங்களைப் பேசி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. திரையில் அரசியல் விழிப்புணர்வு குறித்துப் பேசிய இயக்குனர்கள் இருவரும், நிஜ வாழ்க்கையில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறியது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
