அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் உடனான தற்காலிக போர் நிறுத்தக் காலத்தில் அந்த நாடு தனது ஆயுத பலத்தைப் பெருக்கிக் கொள்ளக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைதி நிலவுவது போல் தோன்றினாலும், திரைமறைவில் ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை ‘ரீலோட்’ (Reload) செய்ய வாய்ப்புள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஈரானின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அந்த நாட்டின் மீது தங்களுக்கு முழுமையான நம்பிக்கை இன்னும் ஏற்படவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் ஒரு ஒருங்கிணைந்த முன்மொழிவை வழங்கும் வரை போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் மீண்டும் தொடங்கலாம் என அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதே வேளையில், அணு ஆயுதப் பயன்பாட்டைத் தவிர்த்து, ஒரு நிரந்தரமான மற்றும் சிறந்த ஒப்பந்தத்தை எட்டுவதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
