“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

By Soundarya on சித்திரை 22, 2026

Spread the love

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். பெண் அரசியல்வாதிகள் குறித்து அவர் பேசிய பேச்சு ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது 70 முதல் 80 சதவீத அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கிறார்கள் என்று கூறி மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இவர்களை முதலில் சோதனை செய்யுங்கள் என்று அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.

பெண்கள் ஆணையம் தனக்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து விமர்சித்துள்ள பப்பு யாதவ், தனக்கு நோட்டீஸ் அனுப்ப இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தான் பெண்களுக்கு ஆதரவாகவே பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “கண்ணாடி அறைக்குள் இருந்து கொண்டு அடுத்தவர் மீது கல்லெறிய வேண்டாம்” என்று சக அரசியல்வாதிகளுக்குக் காட்டமான எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இவரது இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.