தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்களால் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹40 உயர்ந்து ₹14,360-க்கும், ஒரு சவரன் ₹320 அதிகரித்து ₹1,14,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கத்தின் விலை மீண்டும் ₹1.15 லட்சம் என்ற இலக்கை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹275-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ₹2,75,000-க்கும் சீராக விற்பனையாகி வருகிறது.
