“பணம் போடுறது அங்க… கடன் வாங்குறது இங்க”… இந்தியர்களின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ உங்களுக்குத் தெரியுமா?… அதிரும் வங்கித்துறை..!!!

By Rajeshwari on சித்திரை 10, 2026

Spread the love

2025-26 நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளின்படி, வங்கி டெபாசிட்களை ஈர்ப்பதில் பொதுத்துறை வங்கிகளை விட தனியார் துறை வங்கிகள் அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, தனியார் வங்கிகள் 12 முதல் 17 சதவீதம் வரை வைப்புத்தொகை வளர்ச்சியைப் பெற்றுள்ள நிலையில், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி (17.2%) மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை முன்னிலையில் உள்ளன.

மேலும் சந்தையில் நிலவும் கடும் போட்டி மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் மற்ற நிதித் தயாரிப்புகளை விட குறைவாக இருப்பதால், டெபாசிட்களைத் திரட்டுவதில் வங்கிகள் சவால்களைச் சந்தித்தாலும், தனியார் வங்கிகள் தங்களின் கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் முதலீட்டாளர்களைக் கவர்ந்து வருகின்றன. மறுபுறம், கடன் வழங்கும் பிரிவில் பொதுத்துறை வங்கிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பொதுத்துறை வங்கிகள் 12 முதல் 22 சதவீதம் வரை கடன் வளர்ச்சியைக் கண்டுள்ள நிலையில், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 22 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது.

   

இந்நிலையில் இந்தியப் பொருளாதாரத்தில் நுகர்வு சார்ந்த மீட்சி மற்றும் பணப்புழக்கம் அதிகரித்துள்ள சூழலில், பொதுத்துறை வங்கிகள் அதிக அளவிலான கடன்களை வழங்கி பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், மக்கள் தங்கள் பணத்தைச் சேமிக்க தனியார் வங்கிகளைத் தேர்ந்தெடுத்தாலும், கடன் பெறுவதற்குப் பொதுத்துறை வங்கிகளையே அதிகம் சார்ந்துள்ளனர் என்பது இந்தத் தரவுகள் மூலம் தெளிவாகிறது.