பீகார் மாநிலம் சரண் பகுதியில் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) கட்சியைச் சேர்ந்த உள்ளூர் நிர்வாகி ஒருவர், இரவு நேரத்தில் வயல்வெளியில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் நடவடிக்கையைச் சந்தேகத்தின் அடிப்படையில் கவனித்த அப்பகுதி மக்கள், அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தங்களைப் படம் பிடிப்பதை உணர்ந்த இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.
அப்போது, வீடியோ எடுத்தவர்களைக் கண்டு ஆத்திரமடைந்த அந்தப் பெண், தனது காலணியைக் கழற்றி அவர்களைத் தாக்க முயன்றார். இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அரசியல் கட்சி நிர்வாகி, பொதுவெளியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
