6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததாக நினைத்த மீன் உயிருடன் மீட்பு… முடிவுக்கு வந்த 40 கோடி கால மர்மம்.. பூமி அழியும் போது இது எங்கே இருந்தது?..!!

By Rajeshwari on சித்திரை 4, 2026

Spread the love

இந்தோனேசியக் கடற்பகுதியில் சுமார் 400 மில்லியன் ஆண்டுகள் பழமையான ‘சீலாகாந்த்’ எனப்படும் அரிய வகை மீன் கண்டறியப்பட்டுள்ளது உலகெங்கிலும் உள்ள கடல்சார் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்கும் முன்பே தோன்றிய இந்த மீன் இனம், சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது.

ஆனால், கடந்த 1938-ஆம் ஆண்டிற்குப் பிறகு இவை மீண்டும் ஆங்காங்கே தென்படத் தொடங்கின. தற்போது இந்தோனேசியாவின் ஆழ்கடல் பகுதியில் மீண்டும் இவை காணப்பட்டது, பரிணாம வளர்ச்சியின் மர்மங்களை அவிழ்க்க உதவும் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இத்தனை கோடி ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் அடையாமல் அப்படியே இருப்பதால், இவை ‘வாழும் புதைபடிவம்’ என்று அழைக்கப்படுகின்றன.

   

இந்த சீலாகாந்த் மீன்கள் மற்ற மீன்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட உடலமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றின் துடுப்புகள் கால்களைப் போன்ற தசை அமைப்பைக் கொண்டுள்ளதால், இவை நிலத்தில் வாழும் முதுகெலும்பிகளின் முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

   

மேலும் ஆழ்கடலில் சுமார் 2,300 அடி ஆழத்தில் வாழும் இந்த மீன்கள், சுமார் 6 அடி நீளம் வரை வளரக்கூடியவை மற்றும் 90 கிலோ வரை எடை கொண்டவை. இவற்றின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு உயிரினம் இன்றும் கடலின் மர்மமான ஆழத்தில் வாழ்ந்து வருவது, இயற்கையின் வியக்கத்தக்க ஆற்றலையும் கடலின் ஆழத்தில் இன்னும் மனிதனுக்குத் தெரியாத பல ரகசியங்கள் புதைந்துள்ளதையும் நமக்கு உணர்த்துகிறது.