ரூ.2,000 மகளிர் உரிமைத்தொகை… இரவோடு இரவாக வெளியான மெகா அறிவிப்பு…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

By Nanthini on சித்திரை 3, 2026

Spread the love

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்தத் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இடம்பெற்ற இந்த அறிவிப்பு, எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வந்தது.

தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொருளாதார ரீதியாகப் பெண்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நடைமுறைகள் அடுத்த ஆட்சிக் காலத்தில் விரைவுபடுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.