ரூல்ஸ் ரூல்ஸ் தான்.! முதலமைச்சர் வாகனத்தை வழிமறித்த தேர்தல் பறக்கும் படை… தஞ்சையில் பரபரப்பு..!!

By Soundarya on பங்குனி 31, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தஞ்சையிலிருந்து திருவாரூருக்கு தேர்தல் பரப்புரைக்காகச் சாலை மார்க்கமாகச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனத்தை அதிகாரிகள் வழிமறித்தனர். எவ்வித பாகுபாடுமின்றி விதிகளின்படி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் முழு ஒத்துழைப்பு அளித்தார். அவரது வாகனத்தை முறையாகச் சோதனை செய்த தேர்தல் அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் இல்லாததை உறுதி செய்த பின்னரே வாகனத்தைச் செல்ல அனுமதித்தனர். முதலமைச்சரின் வாகனமே சோதனைக்குள்ளாக்கப்பட்ட இந்தச் சம்பவம், தேர்தல் விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானவை என்பதையும், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளையும் பறைசாற்றுவதாக அமைந்தது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.