“யார் இவர்கள்? எங்கிருந்து வருகிறார்கள்?” என்று வியக்கும் வகையில் ஒரு வினோத சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒருவர் தனது சைக்கிளின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கை கயிறால் கட்டி எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கு வருகிறார்.
மேலும் பெட்ரோல் விலை உயர்வு ஒருபுறம் இருக்க, பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால், அந்த நபர் இந்த நூதனமான வழியைப் பின்பற்றியதாகத் தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது நகைச்சுவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
What is going on here??? 😂😂 pic.twitter.com/zskyBVHpJk
— PunsterX (@PunsterX) March 28, 2026
“>
இந்நிலையில் “இந்தியர்களின் புத்திசாலித்தனத்திற்கு எல்லையே இல்லை” என்றும், “இது ஒரு அடுத்த கட்ட கண்டுபிடிப்பு” என்றும் கிண்டலாகக் கூறி வருகின்றனர். சைக்கிளில் சென்றாலும், தனது பைக்கிற்காக அந்த நபர் காட்டிய இந்த அதீத முயற்சி, டைம்ஸ் நவ் நவ் பாரத் உள்ளிட்ட முன்னணி ஊடகங்களிலும் செய்தியாகி வைரலாகி வருகிறது.
