“கணவனின் நண்பனுடன் உல்லாசத்தில் இருந்த மனைவி”… இருவரின் நெற்றியை துளைத்த துப்பாக்கி குண்டு…. காசியாபாத்தில் கொடூர சம்பவம்…!!

By Muthu Mani on பங்குனி 28, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியையும் தனது நண்பனையும் கணவனே 7 வயது மகன் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ட்ரோனிக்கா பகுதியைச் சேர்ந்த ரஷீத் (38) என்பவருக்கும், ஷப்னம் (36) என்பவருக்கும் திருமணமாகி 7 குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்த மகனுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ரஷீத்துடன் வேலை பார்த்து வந்த ஃபாஹீம் என்பவர், ரஷீத்தின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோது ஷப்னத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், ரஷீத் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் தனது நண்பனுக்கும் மனைவிக்கும் இடையிலான தகாத உறவை அறிந்த ரஷீத், அவர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளார். இருப்பினும், இருவரும் தங்கள் உறவைக் கைவிடாமல், திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரஷீத், இருவரையும் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஃபாஹீமை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

   

வீட்டிற்கு வந்த ஃபாஹீம் மற்றும் மனைவி ஷப்னம் ஆகிய இருவரையும், தனது 7 வயது சிறுவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ரஷீத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். பின்னர் தனது மகனிடம் “இனிமேல் எல்லாம் சரியாகிவிடும்” எனக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காசியாபாத் போலீஸார், தலைமறைவாக இருந்த ரஷீத்தைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.