சமூக வலைதளங்களில் நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ரயில் நிலையம் ஒன்றில் கூட்ட நெரிசலுக்கு இடையே, கர்ப்பிணியான தனது தாய்க்கு அமருவதற்கு இடம் கிடைக்காததைக் கண்ட 6 வயது சிறுமி, செய்த ஒரு செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது தாய் சோர்வாகவும் அசௌகரியமாகவும் இருப்பதைக் கவனித்த அந்தச் சிறுமி, யோசிக்காமல் முன்வந்து குனிந்து அமர்ந்து, தனது தாய்க்கு ஒரு ‘நாற்காலி’ (Chair) போல மாறி அவருக்குத் தாங்குதல் கொடுத்தார்.
स्टेशन पर जब गर्भवती मां को बैठने के लिए जगह नहीं मिली तो 6 साल की बच्ची खुद बन गई Chair।
जब माँ थकी हुई और असहज दिखीं, तो बेटी तुरंत आगे आई और उन्हें सहारा देने के लिए खुद झुककर बैठ गई।
इस पल को किसी ने रिकॉर्ड कर लिया,और देखते ही देखते ये वीडियो वायरल हो गया।
एक भीड़भाड़… pic.twitter.com/oPDTLseqrr
— Pranjal Verma (@Pranjal_8318) March 26, 2026
இந்த நெகிழ்ச்சியான காட்சியை அங்கிருந்த யாரோ ஒருவர் தனது செல்போனில் படம்பிடிக்க, அது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்தச் சிறுமி தனது தாயின் கால்களுக்கு இடையே குனிந்து அமர, அந்தத் தாய் தனது மகளின் முதுகில் அமர்ந்து சற்று ஓய்வெடுக்கும் காட்சி, பார்ப்பவர்களின் கண்களில் நீரை வரவழைப்பதாக உள்ளது. கூட்ட நெரிசல் மிகுந்த அந்த நிலையத்தில், அந்தச் சிறுமியின் இந்தச் செயல் அன்பின் ஆகச்சிறந்த வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.
உண்மையான அன்பு என்பது பெரிய சொற்களில் இல்லை, மாறாக இது போன்ற சிறிய கவனிப்புகளிலும், மற்றவர்களின் வலியைப் புரிந்து கொள்ளும் பக்குவத்திலும்தான் இருக்கிறது என்பதை இந்த வீடியோ உலகிற்கு உணர்த்தியுள்ளது. “குழந்தைகள் தெய்வத்திற்குச் சமம்” என்பதையும், ஒரு தாய் தன் குழந்தைக்குக் காட்டும் அதே அன்பைத் திரும்பக் கொடுக்கும் அந்த மழலையின் மனதையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
