கழன்றது சைக்கிள்.. கைகொடுக்குமா தாமரை?… ஒரே முடிவால் காலி ஆன கட்சி பதவி… ஜி.கே.வாசன் எடுத்த அந்த ஒரு முடிவு… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!!

By Rajeshwari on பங்குனி 26, 2026

Spread the love

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், வரவிருக்கும் தேர்தலில் பாஜகவின் ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

மேலும் ஜி.கே. வாசனின் இந்த தன்னிச்சையான முடிவானது கட்சியின் தனித்துவத்தை சிதைப்பதாகவும், காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகியோரின் கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாகவும் அதிருப்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் பலர் கூட்டாக விலகியிருப்பது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த உட்கட்சி மோதல் காரணமாக, தேர்தல் நெருங்கும் வேளையில் தமாகா பலவீனமடைந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ‘சைக்கிள்’ சின்னம் அல்லது தனிச் சின்னத்தில் போட்டியிடாமல், கூட்டணி கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்துவது கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

   

இந்த விலகல் படலம் ஒருபுறம் இருக்க, ஜி.கே. வாசன் தனது முடிவில் உறுதியாக இருப்பதால், வரும் நாட்களில் மேலும் பல நிர்வாகிகள் வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது, இது தமாகா வட்டாரத்தில் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.